துணை முதல்-அமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது: செல்வப்பெருந்தகை


துணை முதல்-அமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது: செல்வப்பெருந்தகை
x

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் வலிமையாக உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

திருச்சி,

திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் வலிமையாக உள்ளது. அவதூறுகளை பரப்பி வரும் பாஜகவை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அழைப்பு விடுக்க உள்ளோம்.

தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சர் ஆவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் துணை முதல்-அமைச்சர் ஆவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து கட்சியின் பொதுச்செயலாளரே விளக்கம் தந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story