போரில் வீரமரணமடைந்த வீரருக்கு மரியாதை


போரில் வீரமரணமடைந்த வீரருக்கு மரியாதை
x

போரில் வீரமரணமடைந்த வீரருக்கு ராஜபாளையத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தை சேர்ந்தவர் நாராயணராஜா. இவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1965-ம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போரில் உயிர் நீத்த மூத்த வீரர்களுக்கு விடுபட்ட இறுதி மரியாதை மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாராயண ராஜாவுக்கு, ராஜபாளையத்தில் செயல்படும் 5-வது தமிழ்நாடு தேசிய மாணவர் படையை சேர்ந்த சுபேதார் முருகன் தலைமையில் சுபேதார் ஜெலஸ்டின் மற்றும் ஹவில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும், தேசிய மாணவர் படை மாணவர்களும் இறந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாராயண ராஜா நினைவாக அவரது மகன் சந்திரசேகரன், மகள்கள் ராஜம், கவுசல்யா, ஜெயந்தி ஆகியோரிடம் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.



Next Story