காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story