மரங்கள் தீயில் எரிந்து நாசம்


மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x

மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.

கரூர்

நொய்யல் அருகே குப்பம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கீதாராணி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஏராளமான மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அங்கிருந்து மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.இதேபோல் தளவாபாளையம் அருகே என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதவன் (45). இவர் தனது தோட்டத்தில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். அதன் இடை இடையே மாங்கன்றுகளை நடவு செய்துள்ளார். மாமரங்கள் காய்த்த நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென தென்னந்தோப்பில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக மாமரங்களில் தீப்பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் மாமரங்கள் தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story