உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்


உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்
x

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகா கோவில்தேவராயன்பேட்டை பகுதியில் கும்பகோணம் தஞ்சை நெடுஞ்சாலையில் சாலையோரம் மின்கம்பிகளுக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பட்டுபோன தென்னை மரங்கள் உள்ளன. அதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மரம் முறிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எந்தநேரத்திலும் மரங்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story