உழவன் செயலி குறித்த பயிற்சி


உழவன் செயலி குறித்த பயிற்சி
x

உழவன் செயலி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்

கரூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த பயிற்சி நன்செய் புகளூரில் நடைபெற்றது. இதில், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிமேகலை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உழவன் செயலியினால் ஏற்படும் நன்மை குறித்து எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி விவசாயிகளுக்கு செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று எடுத்து கூறினார். இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story