டிராக்டர் டிரைலர் மாயம்


டிராக்டர் டிரைலர் மாயம்
x

டிராக்டர் டிரைலர் மாயமாகி போனது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது34). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டரின் டிரைலரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது டிராக்டரின் டிரைலரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் ேபரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story