மாவட்ட கைப்பந்து போட்டி


மாவட்ட கைப்பந்து போட்டி
x

தர்மபுரியில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் லீக் கைப்பந்து போட்டி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் லீக் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. நடுவர்கள் வணங்காமுடி, தியாகராஜன், ஜீவா, சசிகுமார் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில் தர்மபுரி அணி முதல் இடத்தையும், சிந்தல்பாடி அணி 2-ம் இடத்தையும், நல்லம்பள்ளி அணி 3-ம் இடத்தையும் பிடித்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.என்.வி.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், அ.தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி, தி.மு.க. நகர பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் கார்த்திகேயன் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு வழங்கினார். சப்தகிரி கல்லூரி துணைத்தலைவர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வீரர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., நகராட்சி கவுன்சிலர்கள் சின்ன பாப்பா மாதேஷ், பாண்டியன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மணிவண்ணன், சங்க நிர்வாகிகள் தகடூர் தங்கராஜ், முத்துக்குமார், மாது, நிர்மல் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மண்டல அளவிலான கைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.


Next Story