கன்னியாகுமரி கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரி கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:46 PM GMT)

விடுமுறை நாளான நேற்று அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

விடுமுறை நாளான நேற்று அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் திரண்டனர்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

அதன்படி விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு நின்று சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

படகு சவாரி செய்து உற்சாகம்

தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறைக்கு சென்று உற்சாகமாக படகு சவாரி மேற்கொண்டனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம் போன்றவற்றில் கூட்டம் நிரம்பி வழிந்தது.


Next Story