தக்காளி விலை உயர்வு


தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 31 July 2023 7:45 PM GMT (Updated: 31 July 2023 7:45 PM GMT)

வடமதுரை அருகே அய்யலூர் சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் தக்காளி விற்பனைக்கு வருகின்றன. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு 100 டன்னுக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும். இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். உள்ளுர் தக்காளி வரத்து குறைவாக உள்ளபோது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

எனவே மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சந்தைக்கு தக்காளி வரத்து மிகக்குறைவாக இருந்தது. இதனால் ஒரு நாளைக்கு 1 டன் அளவிலேயே தக்காளி விற்பனை நடந்தது. இதனால் கடந்த வாரங்களில் தக்காளி விலை அதிகரித்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது தக்காளி விலை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 14 கிலோ எடை கொண்ட பெட்டியின் விலை ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story