திருமங்கலம் அருகே இன்று கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி


திருமங்கலம் அருகே இன்று  கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி
x

திருமங்கலம் அருகே இன்று கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் திருக்கல்யாணத்தினையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரேயுள்ள பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தபோட்டிக்கான காளைகள் முன்பதிவு மற்றும் மாடுபிடிவீரர்களுக்கான முன்பதிவு நேற்று மதியம் முதல் ஆன்லைனில் தொடங்கியது.

இந்த ஆண்டு 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மாடுபிடிவீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் போட்டிகளை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனிஷ்சேகர், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் விழா கமிட்டியினர் கூறுகையில், போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடு பிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும். வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்ககாசு, குத்துவிளக்கு, பேன், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உாிய சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கால்நடைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story