புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 7:45 PM GMT (Updated: 14 Jun 2023 7:45 PM GMT)

கிணத்துக்கடவு அருகே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் லட்சுமி நகரில் உள்ள பேக்கரி கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினார். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதை விற்ற சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியை சேர்ந்த ராஜகுமார்(வயது 28) என்பவரை கைது செய்தார்.


Next Story