வங்காளதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவ முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு


வங்காளதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவ முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவு
x

தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது

சென்னை,

வங்காளதேசத்தில் சிக்கி உள்ள தமிழகர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வங்காளதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும். அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.தமிழக முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின்,அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை, வங்காளதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள். தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*இந்தியாவிற்குள்- +91 1800 309 3793

*வெளிநாடு +91 80 6900 9900

*தொடர்புக்கு +91 80 6900 9901. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story