217 இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


217 இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
x

217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

சென்னை,

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறவுள்ளது.


Next Story