டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
x

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 பதவிக்கான தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து தேர்வர்களும் வரும் 29-ந் தேதி ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story