பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை


பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை
x

பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று விளக்கு பூஜை நடைபெறும் என இந்து சமய அறநிலையதுறை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் முதல் விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை தொடங்கியது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சேலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


Related Tags :
Next Story