திருப்பூர்: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...!


திருப்பூர்: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...!
x

திருப்பூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

திருப்பூர்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் லூர்து ராஜ் (வயது 41). கட்டட வடிவமைப்பாளர். இவர் தனது தொழில் சார்ந்த விஷயமாக இன்று காலை தனது காரில் டிரைவர் செபஸ்டியன் ( 48) என்பவரிடம் கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

பின்பு திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள நண்பர் விஜயராஜ் அழைத்துச் செல்ல இரவு 7 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு மூன்று பேரும் காரைக்குடி செல்வதற்காக வீரபாண்டி பகுதியிலிருந்து கோவில் வழி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

திருப்பூர் பூங்கா நகர் பகுதியில் வந்தபோது திடீரென்று கார் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திய பின்பு 3 பேரும் காரை விட்டு வெளியேறினர். பின்பு அருகில் தண்ணீரை வாங்கி ஊற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story