திருப்பத்தூர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு


திருப்பத்தூர் அரசு கலை கல்லூரி  நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
x

திருப்பத்தூர் அரசு கலை கல்லூரி சார்பில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாவுடன் முடிந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கலை கல்லூரி சார்பில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாவுடன் முடிந்தது.

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கிராமப்புற தூய்மை மற்றும் நோய் விழிப்புணர்வுக்கான இளைஞர்கள் என்ற கருப்பொருளின் கீழ் 7 நாட்கள் சிறப்புமுகாம் புதுப்பேட்டை பகுதியில் நடந்தது. அதன் நிறைவு விழா கல்லூரி முதல்வர் சீனுவாச குமரன் தலைமையில் நடைபெற்றது. திட்ட அலுவலர் நரசிம்மன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணகி அன்பழகன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் ரத்ன நடராசன், திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினர். முடிவில் மாணவி காவியா சிந்து நன்றி கூறினார்.


Next Story