திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருவாரூர்

நீடாமங்கலத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் திரவுபதியம்மன், அர்ச்சுணன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 24-ந்தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜசேகரன் மற்றும் அறங்காவலர்கள் விஸ்வநாதன், குணசேகரன், ராஜாராமன், ராஜன்ரமேஷ், சரவணன், பூங்குழலி ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story