மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் கைலாசநாதர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அய்யனார் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை ரதக்காவடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் கோவிலில் உள்ளே அமைந்துள்ள சோலையப்பர் அய்யனாருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், வீதியுலா கட்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story