விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு


விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
x

கம்பைநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள பெரமாண்டப்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53) விவசாயி. இவரது மனைவி வானஜோதி வீட்டை பூட்டி விட்டு மாடு மேய்க்க சென்றார். பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை ரூ.7 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து மனோகரன் கம்பைநல்லுர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story