காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.8 லட்சம் திருட்டு


காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.8 லட்சம் திருட்டு
x

சூளகிரி அருகே காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.8 லட்சம் திருட்டுபோனது.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (வயது42). காண்டிராக்டர். இவர் நேற்று குடும்பத்துடன் ஓசூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை, ரூ.8 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story