தனியார் நிறுவனத்தில் ரூ.11 லட்சம் திருட்டு


தனியார் நிறுவனத்தில் ரூ.11 லட்சம் திருட்டு
x

தர்மபுரியில் தனியார் நிறுவனத்தில் லாக்கருடன் ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி

தர்மபுரியில் தனியார் நிறுவனத்தில் லாக்கருடன் ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவனம்

தர்மபுரி கே.என்.சவுளூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு பெறப்படும் பணத்தை அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைப்பது வழக்கம். சம்பவத்தன்று நிறுவன டெலிவரி பிரிவு பொறுப்பாளர் சங்கர் வசூல் செய்யப்பட்ட ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்து 266 தொகையை அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலை ஊழியர்கள் வந்த போது அலுவலகத்தில் முன்பு வெளிப்பகுதியில் உள்ள ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லாக்கர் மாயமானது தெரிந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து லாக்கருடன் ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்து 266 திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் வலைவீச்சு

இதுதொடர்பாக சங்கர், தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அலுவலகம் மற்றும் ஷட்டரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story