மளிகை கடையில் நகை திருட்டு


மளிகை கடையில் நகை திருட்டு
x

அரூரில் மளிகை கடையில் பெண்ணின் நகை திருட்டு போனது.

தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் ராயப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (வயது 60). இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் உள்ள தராசு அருகே தனது 4 பவுன் நகையை கழற்றி வைத்த சுந்தரம்மாள் கடைக்குள் பொருட்களை அடுக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்து பொருட்கள் கேட்டனர். இதையடுத்து சுந்தரம்மாள் அவற்றை எடுத்து கொடுத்தார். அந்த வாலிபர் சென்ற பின் பார்த்தபோது அவர் தராசு அருகே வைத்திருந்த நகை திருட்டு போனது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம்மாள் இதுபற்றி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story