சேலம் மணியனூரில்வெள்ளி பட்டறை உரிமையாளர் வீட்டில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை


சேலம் மணியனூரில்வெள்ளி பட்டறை உரிமையாளர் வீட்டில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
x
சேலம்

அன்னதானப்பட்டி

சேலம் மணியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 48), வெள்ளி பட்டறை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே பூட்டாமல், கதவை சாத்திவிட்டு அனைவரும் தூங்கியதாக கூறப்படுகிறது. காலை எழுந்து பார்த்த போது, வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அறையில் வைத்திருந்த ¾ கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. கதவு பூட்டாமல் இருந்ததை பயன்படுத்தி நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story