திருச்சி வீரர் ஒட்டுமொத்த சாம்பியன்


திருச்சி வீரர் ஒட்டுமொத்த சாம்பியன்
x

மண்டல அளவிலான ஆணழகன் போட்டியில் திருச்சி வீரர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மண்டல அளவிலான ஆணழகன் போட்டியில் திருச்சி வீரர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

ஆணழகன் போட்டி

திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் டெல்டா- 2022 போட்டி மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகரசபை உறுப்பினர் மீனாட்சி சூரிய பிரகாஷ், அசோகாசிசுவிகார் மெட்ரிக் பள்ளி தாளாளர் வெங்கட்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியை வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.டி., கருணாநிதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போட்டிகள் 50 கிலோ, 55 கிலோ, 60 கிலோ, 65 கிலோ, 70 கிலோ, 75 கிலோ, 80 கிலோ, 80 கிலோவிற்கு மேல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

திருச்சி வீரர் சாம்பியன்

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் வென்றார். இரண்டாம் இடத்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வனும், மூன்றாம் இடத்தை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதியும் பிடித்தனர்.

இதில் மிஸ்டர் இந்தியா அருள்ஆனந்தம், மாநில சங்க பொறுப்பாளர் குருநாதன், சர்வதேச நடுவர் அமீர் பாச்சா, தேசிய நடுவர்கள் நாகவடிவேல், பாலகிருஷ்ணன், குமார், பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட சங்க செயலாளர் ரத்னபாலன் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story