நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவதி


நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவதி
x

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவதி

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் கங்களாஞ்சேரி அருகே நாகக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கேந்திர வித்யாலயா இயங்கி வருகிறது. நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் நீட் தே்ாவு எழுதுவதற்காக 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் மாணவர்கள், பெற்றோர்கள் வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. 2 மணிக்கு தேர்வு என்றாலும் காலையிலேயே மாணவர்களை பெற்றோர்கள் மையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கங்களாஞ்சேரியில் இருந்து தேர்வு மையம் வரையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பஸ் வசதி இ்ல்லாததால் பெற்றோர்களும், மாணவர்களும் நடந்து வந்தனர். தேர்வு முடியும் வரை வெளியே காத்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வெயில் கொடுமையாலும், நீண்ட நேரம் அமர முடியாமலும் அவதியடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்னிலம் போலீசார் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story