சாலையில் கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவி


சாலையில் கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவி
x

சாலையில் கிடந்த செல்போனைபோலீசாரிடம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் செல்போன் ஒன்று கீழே கிடந்து உள்ளது. அந்த வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் கவுசல்யா என்ற மாணவி அந்த செல்போனை எடுத்து காரியாபட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.மாணவியின் நேர்மையை காரியாபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் பாராட்டினர். இதையடுத்து அந்த செல்போனை உரியவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஒப்படைத்தார்.


Next Story