பா.ம.க.வினர் போராட்டம்


பா.ம.க.வினர் போராட்டம்
x

பாளையங்கோட்டையில் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார். அவரை வரவேற்கும் விதமாக பாளையங்கோட்டை பகுதியில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. அந்த கொடிகளை அகற்ற வேண்டும் என்று உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் உத்தரவிட்டார். இதையடுத்து கட்சி கொடிகள் அகற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் பா.ம.க.வினர் பாளையங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னரும் அவர்கள் கொடி கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி ஜோதிபுரம் திடலில் திரண்டு இருந்தனர். அவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொடி கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.


Related Tags :
Next Story