நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!


நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!
x

நல்லூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

நாமக்கல்


நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள செக்கு பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் மகள் சுஷ்மிதா(வயது19). இவர் வேலகவுண்டம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இவரும் அணியார் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் தினேஷ் குமார் (27) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் கொல்லிமலை ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர்.

பின்னர், இருவரின் பெற்றோர்களை அழைத்து சமாதானம் பேசிய போலீசார், சுஷ்மிதாவை காதல் கணவன் தினேஷ்குமாரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story