மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம்


மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம்
x

மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் சம்பவ நடந்த தினத்தில், மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருப்பதாகவும், அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தது. ஆனால், அந்த கடிதம் வெளியாகவில்லை.

இதற்கிடையே மாணவியின் கடிதம் அவரது தாய் செல்வியிடம் காண்பிக்கப்பட்ட போது, அது தனது மகளின் கையெழுத்து இல்லை என்று தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சம்பவம் நடந்து 5-நாட்களுக்கு பிறகு மாணவி எழுதியதாக கூறப்பட்டு ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. சிகப்பு நிற பேனாவால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஆங்கில எழுத்தில் தமிழ் பேச்சு நடைமுறையில் எழுதப்பட்டு இருந்தது.

அதில், நான் நன்றாக படிப்பேன், வேதியியலில் நிறையா ஈக்கூவேசன் ஆ இருக்கு. எனக்கு ஈக்கூவேசன் படிக்கவே வரவில்லை. அதனால் வேதியியல் ஆசிரியை ரொம்ப பிரசர் பண்ணுனாங்க, ஒருநாள் கணிதம் ஆசிரியையிடம் நான் படிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அவங்களும் என்னை பிரசர் பண்ணுனாங்க. விடுதியில் படிகாம என்ன பண்ணுற என்று ரொம்ப திட்டுனாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் படிக்க மாட்டேனு எல்லாரிடமும், இருவரில் ஒருவர் சொல்லிட்டாங்க. இன்று காலை கிளாசுக்கு வந்த ஸ்டாப் ஒருவர் படிக்கவே மாட்டேங்கிறீயா, விளையாட்டு தனமாகவே இருக்கியாமே என்றார். கணிதம் ஆசிரியை என்னை மட்டுமல்ல இங்குள்ள எல்லோரையும் டார்ச்சர் செய்கிறார். சாந்தி மேடம் உங்களுக்கு நான் ஒரு ரிக்கோஸ்ட் வைக்கிறேன். எனக்கு இந்த வருஷத்துக்கு பள்ளி கட்டணத்தை மட்டும் எங்க அம்மாகிட்டை திருப்பி கொடுத்துடுங்க. புத்தகம் , விடுதி கட்டணம் கூட கொடுத்துடுங்க. ஏன்னா நான் இருந்ததே கொஞ்சநாள் தான் பிளீஸ் மம்.

சாரி அம்மா, சாமி அப்பா, சாரி சந்தோஷ், சாரி துர்கா என்றுசில பெயர்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இருப்பினும் இந்த கடிதம் உண்மையில் மாணவிஸ்ரீமதி தான் எழுதினாரா என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Next Story