அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி


அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

பூம்புகார், திருவெண்காடு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளகினர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வானகிரி, பழைய அகரம், தர்மகுளம், மந்தக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குறைவழுத்த மின்சாரமே கிடைக்கிறது. இதன்காரணமாக வீடுகளில் உள்ள மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகி விடுகின்றன. இதோடு மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை பூம்புகார் மற்றும் திருவெண்காடு பகுதிகளில் சுமார் 20 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டனர். இதேபோல, பெருந்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரபெருந்தோட்டம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின் வினியோகம் இல்லாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், பூம்புகார், திருவெண்காடு பகுதிகளில் தடையின்றி மின் வினியோகம் செய்யக்கோரி திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றால், அந்த புகாரை பெறுவதற்கு கூட உரிய அதிகாரிகள் இல்லை. ஆகவே, எங்கள் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story