கிராம நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி


கிராம நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகிராம நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உடல் உழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்தி விபத்து கால மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும். இயற்கை மரணம், விபத்து மரணம், கல்வி நிதி திருமண உதவி உள்ளிட்ட உதவி தொகை உயர்த்தி வழங்க வேண்டும். உடல் உழைப்பு மற்றும் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டு, கைத்தறி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜாராமன் தலைமையில் அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் விவேக்கிடம் கோரிக்கை முறையீடு மனுவை வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதேபோல் அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை முறையீடு மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story