நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி


நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி
x

நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரூர்

நொய்யல், பேச்சிப்பாறை, நடையனூர், குளத்துப்பாளையம், கொங்கு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.150-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.110-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story