போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது


போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
x

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு வந்த ஒருவர் பெரிய மூட்டையை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு தெற்கு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை போலீசார், அந்த நபரை வழிமறித்து மூட்டையில் என்ன இருக்கிறது? என்று கேட்டனர்.

இதையடுத்து அந்த நபர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், அவர் திசையன்விளை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தாமஸ்குமார் (வயது 39) என்பதும், புகையிலை மூட்டையை மொபட்டில் ஏற்றி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தாமஸ்குமாரை போலீசார் கைது செய்து, மொபட் மற்றும் 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story