அளவுக்கு அதிகமாக மது குடித்த ஓவியர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்த ஓவியர் சாவு
x

ஊத்தங்கரை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த ஓவியர் பலியானார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஓவியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த 1½ ஆண்டுகளாக சிவக்குமார் பள்ளிக்கு வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது.

விசாரணை

இதற்கிடையே அவர் கடந்த ஒரு வாரமாக காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சுவரில் படம் வரையும் பணியை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு பள்ளி வளாகத்தில் படுத்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை அதே இடத்தில் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததாக தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story