மைக் செட் உரிமையாளர் விபத்தில் பலி


மைக் செட் உரிமையாளர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 25 Sep 2023 7:00 PM GMT (Updated: 25 Sep 2023 7:00 PM GMT)

மைக் செட் உரிமையாளர் விபத்தில் பலியானார்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 38). மைக்செட் வைத்து தொழில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் தனது மகன் ஊர்காவலனுடன் திருப்புவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டம் மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அல்லிநகரம் விலக்கு அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் குமார் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த வேல்முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Related Tags :
Next Story