முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை


முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
x

முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மாணவி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு வந்தார்.

அப்போது நாகராஜன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

25 ஆண்டுகள் சிறை தண்டனை

புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜனை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஆஜராகி வந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story