சுடுகாட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி


சுடுகாட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி
x

சுடுகாட்டில் மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-சாத்தூர் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி அன்னலட்சுமி (வயது 57). இவருக்கு கருப்பசாமி, முனியசாமி என்ற மகன்களும், அய்யம்மாள் என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் அன்னலட்சுமி தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story