மாநகராட்சி குப்பை கிடங்கில் 4-வது நாளாக எரியும் தீ


மாநகராட்சி குப்பை கிடங்கில் 4-வது நாளாக எரியும் தீ
x

மாநகராட்சி குப்பை கிடங்கில் 4-வது நாளாக தீ எரிந்து வருகிறது.

கரூர்

கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. 4-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றனர்.


Related Tags :
Next Story