தொழிலாளிக்கு மொபைல் நிறுவனம் ரூ.30,604 இழப்பீடு வழங்க வேண்டும்


தொழிலாளிக்கு மொபைல் நிறுவனம் ரூ.30,604 இழப்பீடு வழங்க வேண்டும்
x

தொழிலாளிக்கு மொபைல் நிறுவனம் ரூ.30,604 இழப்பீடு வழங்க வேண்டும்

திருவாரூர்

ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட பழுதுக்கு பணம் பெற்றும் சரிசெய்யாததால் தொழிலாளிக்கு மொபைல் நிறுவனம் ரூ.30,604 இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

ஆண்ட்ராய்டு போனில் பழுது

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச்சேர்ந்தவர் செல்வகுமார். தொழிலாளி. இவர் கடந்த 25.4.2022- ல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் நிறுவனத்தில் ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார். கடந்த 6.5.2022-ல் அந்த மொபைல் போனில் பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தில் தெரிவித்து ரூ.1018-க்கு சர்வீஸ் செய்துள்ளார். ஆனாலும் போனில் உள்ள பழுது சரியாகவில்லை. இதுகுறித்து செல்வகுமார் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

ரூ.30,604 இழப்பீடு வழங்க வேண்டும்

மொபைல் போனுக்கு வாரண்டி இருக்கும்போது அதில் உள்ள பழுதை நீக்குவதற்கு பணம் பெற்றது நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே அந்த பழைய போனை எடுத்துக்கொண்டு போனுக்கான ரூ.15 ஆயிரத்து 604 வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.30,604-ஐ அந்த மொபைல் நிறுவனம் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Next Story