மின்கம்பியில் உரசியதால் மினிலாரி தீப்பிடித்து எரிந்தது


மின்கம்பியில் உரசியதால் மினிலாரி தீப்பிடித்து எரிந்தது
x

மின்கம்பியில் உரசியதால் மினிலாரி தீப்பிடித்து எரிந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே வைக்கோல் கட்டு மின்கம்பியில் உரசியதால் மினிலாரி தீப்பிடித்து எரிந்தது.

வைக்கோல்கட்டு மின்கம்பியில் உரசியது

கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவருக்கு சொந்தமான மினி லாரி நேற்று சூரியனார் கோவிலில் இருந்து சீனிவாசநல்லூருக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை அஜித் என்பவர் ஓட்டி வந்தார். திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம் ரோட்டில் சன்னாபுரம் அருகே வந்தபோது வைக்கோல் கட்டு மின்கம்பியில் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது.

லாரி முழுவதும் எரிந்தது

இதனை அறிந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் லாரி முழுவதும் எரிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story