நீதிபதியின் மனைவிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது


நீதிபதியின் மனைவிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது
x

நீதிபதியின் மனைவிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது

சிவகங்கை

சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சரத்ராஜ். இவரது மனைவி மைதிலிபா(வயது 38). கர்ப்பிணியான இவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நேற்று காலையில் பெண் குழந்தை பிறந்தது. நீதிபதி ஒருவர், தன்னுடைய மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் டாக்டர்கள் பாராட்டினா்.


Next Story