முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்


முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்
x

ஆலங்குடி குருபகவான் கோவிலில் தங்க முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருவாரூர்

வலங்கைமான்:

ஆலங்குடி குருபகவான் கோவிலில் தங்க முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குருபகவான் கோவில்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வியாழன் மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.

இந்த கோவிலின் சிறப்பு அம்சம் குறித்து அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன்(வயது70) எந்தவிதமான ஆதரவும் இல்லாத நிலையில் பழனியில் இருந்து வலங்கைமானுக்கு வந்தார். மேலும் அவர் தனது இறுதி காலம்வரை ஆலங்குடி குருபகவான் கோவிலில்

தங்கி இருக்க அனுமதி கேட்டு வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் கேட்டார்.

பாராட்டு

அழுக்கு சட்டை மற்றும் நீண்ட நாளான தாடியுடன் தோற்றம் அளித்த அவரிடம் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தினார். ஆலங்குடி கோவிலில் தங்குவதற்காக போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு வந்த அவரது பரிதாப நிலையை பார்த்து முதியவருக்கு மதிய உணவு வழங்கியதுடன், ரூ.1000 கொடுத்து பாதுகாப்புடன் பஸ்சில் ஆலங்குடிக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஆலங்குடி ஆபத்தகாயேஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் ஆலங்குடி ஊராட்சி நிர்வாகத்திடமும் முதியவர் முருகன் குறித்து முழு தகவலையும் தெரிவித்தார். மேலும் அவரை பாதுகாப்புடன் கண்காணிக்கவும் கேட்டுக்கொண்டார். ஆதரவற்ற நிலையில் தஞ்சம் அடைய வந்த முதியவருக்கு மனிதநேயத்துடன் உதவிய இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story