வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசம்
வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசம் ஆனது.
கரூர்
குளித்தலை பாரதி நகர் பகுதிைய சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான துரை. இவர் தனது வீட்டின் அருகே மாடுகளுக்கு தீவனம் அளிப்பதற்காக வைக்கோல்போர்களை அடுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் எதிர்பாராத விதமாக வைக்கோல்போர் தீ பிடித்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அைணக்க போராடினர். மேலும் இது தொடர்பாக முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வைக்கோல்போர் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story