ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையிலும், படிப்பிலும் கவர்னர் அரசியல் செய்கிறார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா


ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையிலும், படிப்பிலும் கவர்னர் அரசியல் செய்கிறார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
x

கோப்புப்படம் 

ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையிலும், படிப்பிலும் கவர்னர் அரசியல் செய்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என கவர்னர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கூறுகையில்,

நீட் தேர்வின் கொடுமைகள் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக எடுத்துக்கூறியும், கவர்னர் இப்படி முடிவு எடுக்கிறார். எல்லாவற்றிலும் கவர்னர் அரசியல் செய்வதை போல, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையிலும், படிப்பிலும் கவர்னர் அரசியல் செய்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.


Next Story