ஆடு முட்டி விவசாயி பலி


ஆடு முட்டி விவசாயி பலி
x

ஆடு முட்டி விவசாயி பலியானார்.

சேலம்

மேச்சேரி:-

மேச்சேரி அருகே புலிகுண்டூர் அமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 62). விவசாயி இவர் வீட்டில் ஆடு வளர்த்து வந்தார். கடந்த 18-ந் தேதி ஆடு அருகில் அவர் சென்ற போது வயிற்றுப்பகுதியில் பலமாக முட்டியது. இதில் படுகாயம் அடைந்து வலியால் அலறித்துடித்த வெங்கடாசலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story