சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சாமுவேல்(வயது 43). கூலி தொழிலாளி. இவர் 4.12.21-ல் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமுவேலை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி சாமுவேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story