சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x

சிறுமி மாயமானார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்பத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவரது மகள் நந்தினி(வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்துவிட்டு, அதே தெருவில் வசிக்கும் தனது பாட்டி ராணி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பாட்டியுடன் தூங்கிய அவரை, பின்னர் காணவில்லை. அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராணி உடையார்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான நந்தினியை தேடி வருகின்றனர்.


Next Story