முன்னால் சென்ற வேன் மீது மொபட் மோதி விவசாயி பலி


முன்னால் சென்ற வேன் மீது மொபட் மோதி விவசாயி  பலி
x

முன்னால் சென்ற வேன் மீது மொபட் மோதி விவசாயி பலியானார்.

கரூர்

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). விவசாயி. இவர் டீ குடிப்பதற்காக தனது மொபட்டில் அய்யர்மலை பகுதிக்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு குளித்தலை-மணப்பாறை சாலையில் அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற வேன் டிரைவர் திடீரென தனது வேனை நிறுத்தியபோது முருகேசனின் மொபட் வேன்மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில்அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story